ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி: சீரம் நிறுவனம்

கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆடார் பூனேவாலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2023, 6:07 pm IST

கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனேவாலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

புணோவில் உள்ள பாரதி வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய பூனேவாலா, அடுத்த 10-15 நாட்களில் கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துவிடும் என்று தெரிவித்தார்.

கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டை விட ஒமிக்ரானுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்படும் என்றும், கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசிடம் போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் பூனேவாலா கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பூனேவாலாவுக்கு டாக்டர் பதங்ராவ் கதாம் நினைவு விருதை என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வழங்கினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.