வெடிகுண்டு மிரட்டல்: ஜாம்நகரிலிருந்து புறப்பட்டது ரஷிய விமானம்

கோவா சென்று சேர வேண்டிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் சோதனை நடத்தப்பட்டபிறகு, கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.
வெடிகுண்டு மிரட்டல்: ஜாம்நகரிலிருந்து புறப்பட்டது ரஷிய விமானம்
வெடிகுண்டு மிரட்டல்: ஜாம்நகரிலிருந்து புறப்பட்டது ரஷிய விமானம்
Published on
Updated on
1 min read

ஜாம்நகர்: கோவா சென்று சேர வேண்டிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் சோதனை நடத்தப்பட்டபிறகு, கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

செவ்வாய்க்கிழமை பகல் 1 மணிக்கு கோவா விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ரஷியாவிலிருந்து கோவா வந்த விமானத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் உடனடியாக ஜாம்நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் மற்றும் பயணிகளின் உடைமைகள் என அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், விமானம் கோவா நோக்கிப் புறப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com