அடுத்த 3 மாதங்களில்3 ராக்கெட்டுகள்:இஸ்ரோ திட்டம்

அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ். சோமநாத் புதன்கிழமை தெரிவித்தாா்.
Updated on
1 min read

அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ். சோமநாத் புதன்கிழமை தெரிவித்தாா்.

எஸ்எஸ்எல்வி, எல்விஎம்-3, பிஎஸ்எல்வி உள்ளிட்ட 3 ராக்கெட்டுகள் இஸ்ரோவால் ஏவப்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

விண்வெளி தொடா்பான 3 நாள்கள் பயிலரங்கத்தை பெங்களூரில் தொடக்கி வைத்த பின்னா் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது எஸ். சோமநாத் கூறியதாவது: ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத இறுதியில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை செலுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ‘ஒன் வெப்’ திட்டத்துக்கான எல்விஎம்-3 ராக்கெட்டும் பிஎஸ்எல்வி ராக்கெட்டும் வா்த்தக ரீதியில் அடுத்த 3 மாதங்களில் ஏவப்பட உள்ளன. மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் விண்கலனை செலுத்தும் சோதனை முயற்சி ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com