ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் தில்லியில் அறிவிக்கிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். 

News image
Updated On :18 ஜனவரி 2023, 5:35 am

DIN


மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் தில்லியில் அறிவிக்கிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். 

நாகலாந்து மாநில பேரவையின் பதவிக் காலம் வரும் மார்ச் 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல மேகாலயா மாநிலத்தின் பேரவை பதவிக் காலம் மார்ச் 15 ஆம் தேதியுடனும், திரிபுரா மாநில பேரவையின் பதவிக்காலம் மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 

இதையடுத்து இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று புதன்கிழமை அறிவிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் குஜராத், ஹிமாச்சலில் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்டமாக 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவிக்கிறது. 

அதாவது, நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இன்று புதன்கிழமை(ஜன.18) மதியம் 2.30 மணியளவில் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிக்கிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நாகலாந்தில் பாஜக-நாகா மக்கள் முன்னிணியின் கூட்டணி ஆட்சியும், மேகாலயாத்தில் பாஜக-தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியும் மற்றும் திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.