சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பாரத ராஷ்டிர சமிதியின் முதல் பொதுக்கூட்டம்: கேஜரிவால், பினராயி பங்கேற்பு!

பாரத ராஷ்டிர சமிதியாக கட்சியின் பெயரை மாற்றிய பிறகு இன்று நடைபெறும் முதல் பொதுக்கூட்டத்தில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.

News image
Updated On :18 ஜனவரி 2023, 11:02 am IST

பாரத ராஷ்டிர சமிதியாக கட்சியின் பெயரை மாற்றிய பிறகு இன்று நடைபெறும் முதல் பொதுக்கூட்டத்தில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தை ஆளும் முதல்வர் சந்திரசேகர் ராவ் தேசிய அரசியலில் தடம் பதிக்கும் நோக்கில் தெலங்கானா ராஷ்டிர சமிதியாக இருந்த தனது கட்சியின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். இந்த பெயர் மாற்றத்திற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கம்மம் நகரில் பாரத ராஷ்டிர சமிதியின் முதல் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த பொதுகூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், பாரத ராஷ்டிர சமிதியின் கொடியை சந்திரசேகர் ராவ் ஏற்றி வைக்கவுள்ளார்.

இந்தாண்டு இறுதியில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான இந்த பொதுக்கூட்டம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.