பாரத ராஷ்டிர சமிதியாக கட்சியின் பெயரை மாற்றிய பிறகு இன்று நடைபெறும் முதல் பொதுக்கூட்டத்தில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தை ஆளும் முதல்வர் சந்திரசேகர் ராவ் தேசிய அரசியலில் தடம் பதிக்கும் நோக்கில் தெலங்கானா ராஷ்டிர சமிதியாக இருந்த தனது கட்சியின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். இந்த பெயர் மாற்றத்திற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கம்மம் நகரில் பாரத ராஷ்டிர சமிதியின் முதல் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்த பொதுகூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், பாரத ராஷ்டிர சமிதியின் கொடியை சந்திரசேகர் ராவ் ஏற்றி வைக்கவுள்ளார்.
இந்தாண்டு இறுதியில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான இந்த பொதுக்கூட்டம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



