வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கடந்த நிதியாண்டில் பாஜக, காங்கிரஸ் பெற்ற நன்கொடை எவ்வளவு தெரியுமா?

2021-22 நிதியாண்டில் பாஜக ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜனவரி 2023, 1:15 pm IST


புதுதில்லி: 2021-22 நிதியாண்டில் பாஜக ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணைய விதிகளின்படி, அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் பெறப்பட்ட நன்கொடைகளின் ஆண்டு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட 8 தேசியக் கட்சிகளும் கடந்த 2021-22 நிதியாண்டில் பெறப்பட்ட நன்கொடைகளின் ஆண்டுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. அதன் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாஜக அதிகபட்சமாக ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ.1,033.7 கோடி பெற்றுள்ளது. மேலும், கட்சியின் செலவினமாக ரூ.854.46 கோடியாக உள்ளது.  

அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி ரூ.541.27 கோடி நன்கொடை பெற்றுள்ளது. கட்சியின் செலவினமாக ரூ.400.41 கோடியாக உள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.2.87 கோடி நன்கொடை பெற்றுள்ளது. கட்சியின் செலவினமாக ரூ.1.18 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.