பஞ்சாப், ஹரியாணாவில் நீடிக்கும் பூஜ்ய டிகிரி: குளிர்ந்த காலநிலையால் மக்கள் அவதி!

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் குளிர்ந்த வானிலை தொடர்ந்து நீடித்து வருவதால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
தமிழகத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம்!
Published on
Updated on
1 min read

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் குளிர்ந்த வானிலை தொடர்ந்து நீடித்து வருவதால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

பஞ்சாபின் பதிண்டாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0.6 டிகிரியாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட ஐந்து டிகிரி குறைவாகப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமிர்தசரஸில் இயல்பை விட ஒரு டிகிரி குறைந்து 3.3 டிகிரியாகவும், அதேநேரத்தில் லூதியானாவில் 6.8 செல்சியஸாக பதிவானது. 

பாட்டியாலா, பதான்கோட், ஃபரித்கோட் மற்றும் குர்தாஸ்பூரில் 5.7, 6, 1.4 மற்றும் 5 டிகிரி செல்சியஸ் குளிர் காலநிலை நிலவியது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் கூட்டுத் தலைநகரான யூனியன் பிரதேசமான சண்டிகரில் குறைந்தபட்சமாக 6.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

ஹரியாணாவில், அம்பாலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.6 டிகிரியாகவும், ஹிசாரின் குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரியாகவும் இருந்தது, இது இயல்பை விட 4டிகிரி குறைவாகும். 

கர்னால், நர்னால், ரோஹ்தக், பிவானி மற்றும் சிர்சா ஆகிய இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4.2, 3.6, 6, 6.6 மற்றும் 3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com