ஒடிசாவில் சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ் மீது காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கவலைக்கிடமான நிலையில் ஜர்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.