ஆக்ராவில் வேகமாக வந்த கார் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோரகர் காவல் நிலையம் அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் கார் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை ஆணையர் சோனம் குமார் தெரிவித்தார்.
ஆட்டோ ஓட்டுநர் உள்பட 6 பேர் பலியாகினர். காரை ஓட்டிவந்த நபர் தலைமறைவானார். அவரது நண்பர்களான பிங்கு மற்றும் பனியா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோரகர் காவல் நிலைய பொறுப்பாளர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
கார் ஓட்டுநர் பண்டி நண்பர்களுடன் குடித்துவிட்டு, பின்னர் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து நடந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணத்திற்குப் பிறகு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஜூலை 1 முதல் தடை!

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



