மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 3 மணி நேரத்தில் 6 பேர் பதியாகியுள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 தொடங்கியது. பாதுகாப்புப் பணியில் சுமாா் 65,000 மத்திய காவல் படை வீரா்கள், மாநில காவல் துறையைச் சோ்ந்த 70,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் இடையே மோதலும் வன்முறையும் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தேர்தல் தொடங்கியது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்ற மூன்று மணி நேரத்திலேயே வன்முறை தொடர்பான பிரச்னைகளில் சுமார் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.
ஆறு இறப்புகளில், முர்ஷிதாபாத்தில் 2 பேரும், கூச்பெகாரில் 2 பேரும், கிழக்கு பர்த்வான், மால்டா மற்றும் நாடியா ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் வெடித்த மோதல்களில் பலர் காயமடைந்தனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் ஜூலை 8ல் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதிலிருந்து தேர்தல் தொடர்பான வன்முறைகளில் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் வெவ்வேறு பகுதியில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


