ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

நடுவழியில் நின்ற ரயில்.. இறங்கித் தள்ளும் ராணுவ வீரர்கள்! (விடியோ)

பழுதாகி நின்ற காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், பழுதான ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியுமா?

News image
Updated On :10 ஜூலை 2023, 4:25 pm IST

பழுதாகி நின்ற காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், பழுதான ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியுமா?

வட மாநிலப் பகுதியில் பெயர் தெரியாத பழுதாகி நின்ற ரயிலை ராணுவ வீரர்களும், மக்களும், ரயில்வே ஊழியர்களும் தண்டவாளத்தில் இறங்கி தள்ளும் காணொலி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சாலையில் பழுதாகி நிற்கும் பேருந்தை, பயணிகள் கீழே இறங்கி தள்ளி ஸ்டார்ட் செய்வதை நேரில் பலர் கண்டதுண்டு. சிலர் அனுபவித்தும் இருப்பர். ஆனால், முதல் முறையாக பழுதாகி நின்ற ரயிலை தள்ளும் காட்சி வெளியாகியுள்ளது.

எனினும், இந்த ரயில் எந்தப் பகுதியில் நின்றுவிட்டது, இதனை ராணுவ வீரர்கள் தள்ளுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், தெற்கு மத்திய ரயில்வே பகுதியின் கீழ் இயங்கும் ஒரு ரயில் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது.

அதன்படி, ஒரு ரயில், நடுவழியில் பழுதாகி நின்றுள்ளது. இதையடுத்து, ரயிலில் பயணித்த ராணுவ வீரர்களும், பிற பயணிகளும் இறங்கி, அந்த ரயிலை தள்ளுவது போன்ற காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆனால், பழுதாகி நின்ற ரயிலின் பெயர் குறித்தும், எந்த வழிதடத்தில் பழுதானது என்பது குறித்த செய்திகள் வெளியாகவில்லை.

ரயிலை பொதுமக்கள் தள்ளி இயக்க முடியுமா? அவ்வாறு தள்ளுவதற்குக் காரணம் என்ன என்றெல்லாம் கருத்துகளும் விமரிசனங்களும் பதிவாகி வருகிறது.

வந்தே பாரத் போன்ற அதிநவீன ரயில்களை இயக்குவதாக பெருமை கொள்ளும் மத்திய அரசு, மறுபக்கம், பிற ரயில்களையும் வழித்தடங்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டுமென்றும், ரயில் ஸ்டார்ட் ஆகும் பட்சத்தில் கீழே இருக்கும் பயணிகள் எவ்வாறு பாதுகாப்பாக ரயிலில் மீண்டும் ஏறுவார்கள் எனவும் இணையவாசிகள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.