தில்லி வெள்ள பாதிப்பு: துணைநிலை ஆளுநர், முதல்வர் கேஜரிவால் ஆய்வு

தில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பார்வையிட்டார். 
தில்லி வெள்ள பாதிப்பு: துணைநிலை ஆளுநர், முதல்வர் கேஜரிவால் ஆய்வு
Published on
Updated on
1 min read

தில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பார்வையிட்டார். 

யமுனையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தேசியத் தலைநகா் தில்லியின் பல்வேறு இடங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. நகரத்தின் யமுனா பஜாா், ராஜ்காட், கஷ்மீரி கேட், ஐ.எஸ்.பி.டி., ஐ.டி.ஓ., மயூா்விஹாா் உள்ளிட்டப் பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பாதிப்பு காரணமாக யமுனை ஆற்றின் கரையோரம் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பட்டுள்ளனா். 

கடந்த 3 நாள்களாக யமுனையின் நீா்மட்டம் உயா்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை முதல் குறையத் தொடங்கியது.

இந்த நிலையில் தில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று பார்வையிட்டார். முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளையும் அவர் கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், யமுனை வெள்ளத்தால் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ள மக்களுக்காக பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்களை திறந்துள்ளோம். 

வெள்ளத்தின் போது ஏராளமானோர் ஆதார் போன்ற முக்கிய ஆவணங்களை இழந்துள்ளனர். எனவே சிறப்பு முகாம்கள் அமைத்து பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். வெள்ளத்தில் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்த மக்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

வெள்ளம் பாதித்த மோரிகேட் பகுதியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், ராஜ்காட் பகுதியில் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவும் ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்க்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com