தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மகாராஷ்டிரத்தை புரட்டிப்போட்ட கனமழை: 2,200 பேர் வெளியேற்றம்!

மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து 2,200 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :20 ஜூலை 2023, 10:48 am

DIN

மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து 2,200 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புணே, மும்பையில் மிக கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் ராய்காட்டில் நேற்றிரவு பெய்த கனமழைக்கு 125 வீடுகள் சேதமடைந்தன. கலப்பூர் தாலுகாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் சிக்சி பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இடைவிடாது பெய்த கனமழையால் ராய்காட்டில் உள்ள 28 அணைகளில் 17 அணைகள் நிரம்பியுள்ளதாக மாவர் நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாவட்டத்தின் பல இடங்களில் 200 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளன. 

Story image

வியாழக்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பன்வெல் தாலுகாவில் 267.7 மிமீ மழையும், போலட்பூர் 266 மிமீ, மஹாத் 230.9 மிமீ, கர்ஜாத் 226.6 மிமீ, பென் 212.7 மிமீ, யுரான் 207.5 மிமீ, சுதாகத் 196.4 மிமீ, கலாபூர் 182.5. தலா 186 மிமீ மற்றும் அலியாப்க் 180.4, ரோஹா 156.9 மிமீ, மான்கோன் 148.1 மீ.மீ, ஸ்ரீவர்தன் 145.4 மி.மீ பதிவாகியுள்ளது. 

மாவட்டத்தில் மிக கனமழை, வெள்ளம் காரணமாக 746 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,227 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதில் 704 பேர் போலத்பூர் தாலுகாவிலும், யுரேன் தாலுகாவில் உள்ள சிர்னர் கிராமத்தைச் சேர்ந்த 450 பேர் மற்றும் மகாத் தாலுகாவைச் சேர்ந்த 430 பேர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் சராசரி மழை அளவு 3,148 மி.மீ ஆகும். ஆனால் இந்தாண்டு சராசரி அளவில் 1,524.5 மி.மீ மழை இதுவரை பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.