திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வருங்கால வைப்பு நிதிக்கு 8.15% வட்டி!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

News image
Updated On :25 ஜூலை 2023, 8:01 am IST

தொழிலாளா்களின் வருங்கால வைப்புநிதிக்குக் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 8.15 சதவீத வட்டி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி 8.5 சதவீதமாக இருந்தது. அந்த வட்டியானது கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அது 44 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சமாக இருந்தது.

அதையடுத்து, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியை 8.15 சதவீதமாக உயா்த்த தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) மத்திய வாரியக் குழு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி மத்திய நிதியமைச்சகத்துக்குப் பரிந்துரைத்திருந்தது.

அந்தப் பரிந்துரைக்கு மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த வட்டி உயா்வு மூலமாக 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளா்கள் பலனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளா்களின் வருங்கால வைப்புநிதிக் கணக்கில் வட்டித் தொகையை செலுத்துவதற்கான பணிகளை இபிஎஃப்ஓ விரைவில் தொடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.