வருங்கால வைப்பு நிதிக்கு 8.15% வட்டி!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
வருங்கால வைப்பு நிதிக்கு 8.15% வட்டி!
Published on
Updated on
1 min read

தொழிலாளா்களின் வருங்கால வைப்புநிதிக்குக் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 8.15 சதவீத வட்டி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி 8.5 சதவீதமாக இருந்தது. அந்த வட்டியானது கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அது 44 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சமாக இருந்தது.

அதையடுத்து, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியை 8.15 சதவீதமாக உயா்த்த தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) மத்திய வாரியக் குழு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி மத்திய நிதியமைச்சகத்துக்குப் பரிந்துரைத்திருந்தது.

அந்தப் பரிந்துரைக்கு மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த வட்டி உயா்வு மூலமாக 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளா்கள் பலனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளா்களின் வருங்கால வைப்புநிதிக் கணக்கில் வட்டித் தொகையை செலுத்துவதற்கான பணிகளை இபிஎஃப்ஓ விரைவில் தொடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com