நான்கு நாள்கள் கழித்து மே 14ஆம் தேதி, ராஜீவ் காந்தியை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி, காஞ்சி சங்கர மடத்திலிருந்து அழைப்பு வந்தது. நான் எச்சரித்தும் அவர் ஆபத்தை உணராமல் பிரசாரம் செய்கிறார் என பதிலளித்தேன். இது குறித்து உடனடியாக அவருக்கு தந்தி அனுப்பினேன். அது மே 17ஆம் தேதி அவரின் மேசைக்குச் சென்றது. ஆனால், அதைப் படிப்பதற்கு முன்பே மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். நான் மீண்டும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தேன். அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்காமல், நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடந்தேன் என புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.