நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டது!

தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் 'பிரதமர் அருங்காட்சியம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 
நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டது!
Published on
Updated on
1 min read

தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் 'பிரதமர் அருங்காட்சியம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

தில்லியில் தீன் மூர்த்தி பவன் என்ற வரலாற்று கட்டடத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் உள்ளது. ஆங்கிலேய ஆட்சியில் அவர்களுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு இதில் தங்கியுள்ளார். 

நேரு மறைந்த பிறகு அங்கு ஒரு நூலகமும் விடுதலை போராட்டத்தில், இந்தியாவின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது. 

இந்நிலையில் இந்த நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை 'பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்' என்று மாற்றி அறிவித்தது மத்திய அரசு. 

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் நேரு அருங்காட்சியகத்தின் பெயர் பலகைகள் மாற்றப்பட்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com