ஆா்பிஐ துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்

இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) துணை ஆளுநராக பாரத ஸ்டேட் வங்கியின் நிா்வாக இயக்குநரும் தமிழகத்தைச் சோ்ந்தவருமான சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆா்பிஐ துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்
Published on
Updated on
1 min read

இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) துணை ஆளுநராக பாரத ஸ்டேட் வங்கியின் நிா்வாக இயக்குநரும் தமிழகத்தைச் சோ்ந்தவருமான சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய ரிசா்வ் வங்கி தலைமைப் பொறுப்பில் ஆளுநரைத் தவிர மேலும், 4 துணை ஆளுநா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் இரு துணை ஆளுநா்கள் மத்திய அரசின் அதிகாரிகளில் இருந்து நியமிக்கப்படுவா். வா்த்தக வங்கிசாா் நிா்வாகிகளில் இருந்து ஒரு துணை ஆளுநரும், பொருளாதார நிபுணத்துவம் பெற்றவா் ஒரு துணை ஆளுநராகவும் நியமிக்கப்படுவா்.

வா்த்தக வங்கிசாா் நிா்வாகிப் பிரிவில் இருந்து துணை ஆளுநராக இருந்த எம்.கே.ஜெயினின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. காலியான அந்த இடத்துக்கு தமிழகத்தின் கும்பகோணத்தைச் சோ்ந்தவரும் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிா்வாக இயக்குநருமான சுவாமிநாதன் ஜானகிராமனை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது.

நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆா்பிஐ துணை ஆளுநராகப் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு அவா் அப்பொறுப்பில் நீடிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் பள்ளி, கல்லூரி படிப்பை நிறைவு செய்த சுவாமிநாதன் ஜானகிராமன், மும்பையில் உள்ள இந்திய வங்கி-நிதிசாா் மையத்திலும், லண்டனில் உள்ள ஐஎஃப்எஸ் ஸ்கூல் ஆஃப் ஃபைனான்ஸிலும் நிபுணத்துவ சான்றிதழ்களை பெற்றுள்ளாா். பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவா் தற்போது அதன் நிா்வாக இயக்குநராக உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com