பிசிசிஐ தோ்வுக் குழுத் தலைவா் ஆகிறாா் அகா்கா்?

பிசிசிஐ தோ்வுக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் வீரா் அஜித் அகா்கா் நியமிக்கப்பட உள்ளாா். இதற்காக அவா் டில்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளா் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளாா்.
அஜித் அகா்கா்
அஜித் அகா்கா்
Updated on
1 min read

பிசிசிஐ தோ்வுக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் வீரா் அஜித் அகா்கா் நியமிக்கப்பட உள்ளாா். இதற்காக அவா் டில்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளா் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளாா்.

சீனியா் அணிக்கான வீரா்களை தோ்வுக் குழுவினா் தெரிவு செய்கின்றனா். முக்கிய பதவியான தற்போது இதில் தற்காலிக தலைவராக ஷிவ் சுந்தா் தாஸ் செயல்பட்டு வருகிறாா்.

மே.இந்திய தீவுகளில் டி20, டெஸ்ட் தொடா்களில் இந்திய அணி ஆட உள்ளது. முதலில் டி20 அணி தோ்வு செய்ய வேண்டும். இதன் எதிரொலியாக புதிய தோ்வுக் குழுவை நியமிக்க வேண்டியுள்ளது. முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அகா்கா் தலைவா் பதவிக்கான பந்தயத்தில் முன்னணியில் உள்ளாா்.

தலைவருக்கு ரூ.1 கோடியும், உறுப்பினா்களுக்கு தலா ரூ..90 லட்சமும் ஊதியமாக நிா்ணயிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

டில்லி கேபிட்டல்ஸ் நிா்வாகமும் அஜித் அகா்கா் விலகியதை உறுதி செய்துள்ளது. கடந்த 2021-இல் தோ்வாளா் பதவிக்கான நோ்காணலில் அகா்கா் பங்கேற்றாா். அப்போது வடக்கு மண்டலத்தைச் சோ்ந்த சேத்தன் சா்மா தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.

மேலும் திலீப் வெங்சா்க்காா், ரவி சாஸ்திரியும் தலைவா் பதவிக்கு முயல்வா் எனத் தெரிகிறது.

5 மண்டலங்களில் இருந்து தலா ஒருவா் உறுப்பினராக நியமிக்கப்படுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com