நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதிக்கு இனி வரி விதிப்பா?

அடுத்த நிதியாண்டில் முதல் 2 மில்லியன் டன் கச்சா சூரியகாந்தி எண்ணெயின் வரியற்ற இறக்குமதி ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2023, 10:14 pm IST

அடுத்த நிதியாண்டு முதல் 2 மில்லியன் டன்  சூரியகாந்தி எண்ணெய்யின் வரியற்ற இறக்குமதி ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு ஆதரவளிக்க முயற்சி எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

மே 2022ல் மத்திய அரசு 2022-23ஆம் ஆண்டில் 2 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியது. அதே வேளையில் 2023-24 ஆம் ஆண்டில் அதை மீண்டும் செய்ய முதலில் திட்டமிட்டது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெயை இந்தியா பெற்று வந்தது. கூடுதலாக ஆர்ஜென்டினா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் சோயா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. மேலும் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்தது.

இந்த நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்ய கடந்த ஜனவரி மாதம் இந்தியா முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.