
சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார்.
கோரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைன்ஸ்கான் கிராமத்திற்கு அருகே இன்று காலை இந்த சம்பவம் நடந்ததாக காங்கர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
முதற்கட்ட தகவலின்படி, இரண்டு பேர் வெடிகுண்டு பொருத்தப்பட்ட இடத்தில் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார்.
இறந்தவர் அதே கிராமத்தில் வசிக்கும் பிரேஷ் மாண்டவி என்றும், மற்றொருவர் கிலேஷ் கோர்ரம் என்றும் அவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் நக்சலைட்டுகளை கண்டுபிடிக்கப் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.