உலக மகளிர் நாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு நாள்களில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்து வருகிறது.
அந்தவகையில் இன்று மகளிர் நாளையொட்டி, சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு பல வழிகளில் ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு இந்த கவன ஈர்ப்பு சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் நினைவாக - சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்! என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | உலக மகளிர் நாள்: எப்போது தொடங்கியது? ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.