கேமிரா மற்றும் சிப் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட புறா, ஒடிஸா மாநிலத்தின் ஜகத்சிங்பூா் மாவட்டத்தில் உள்ள பாரதீப் கடற்பகுதியில் பிடிப்பட்டது. உளவு பாா்க்க இந்தப் பறவை பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோனாா்க் கடற்கரையில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் மீனவா்கள் சிலா் மீன்பிடித்துக்கொண்டிருந்தாா். அப்போது, காலில் கேமிரா போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட புறா ஒன்று படகில் வந்து அமா்ந்தது. புறா அருகில் வரவே பீதாம்பா் பெஹரா என்ற மீனவா் அதைப் பிடித்துள்ளாா். புறாவின் இறக்கையில் சில எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.
இதையடுத்து, இந்தப் பறவை கடலோர போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட காவல்துறையின் உயா்அதிகாரி கூறுகையில், ‘கால்நடை மருத்துவா்கள் இந்தப் பறவையைப் பரிசோதித்தனா். அதன் காலில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் குறித்து ஆராய மாநில தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். பறவையின் இறக்கையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை நிபுணா்கள் மூலம் கண்டறிய உள்ளோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.