ஆத் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் தில்லி அமைச்சர்களாக இன்று பதவியேற்பு!

ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் தில்லி அமைச்சரவையில் அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ளனர். 
ஆத் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் தில்லி அமைச்சர்களாக இன்று பதவியேற்பு!
Published on
Updated on
1 min read

ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் தில்லி அமைச்சரவையில் அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ளனர். 

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், திகார் சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் ராஜிநாமாவைக் குடியரசுத் தலைவர் முர்மு செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

தில்லியில் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட அதிஷி மர்லினா மற்றும் சௌரப் பரத்வாஜ் இன்று மாலை 4.00 மணியளவில் பதவியேற்க உள்ளனர். இதுதொடர்பாக பொது நிர்வாகத் துறை பதவியேற்பு விழாவை ஏற்பாடு செய்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com