ரஜெளரி: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டம், நெளஷேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை ராணுவம் கைப்பற்றி உள்ளது.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
"உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், ஜங்கர், நெளஷேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே ராணுவத்தினா் சனிக்கிழமை (மார்ச் 11) அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, 2 அதிநவீன துப்பாக்கிகள், 2 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டு மற்றும் 2 கிலோ போதைப் பொருள்கள் சிக்கின" என்று தெரிவித்தார்.
மேலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
முன்னதாக, மார்ச் 5 ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள முகமது ரபீக் வீட்டில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் 7 கிலோ போதைப்பொருள் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


