கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் வெடிகுண்டு, போதைப் பொருள்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டம், நெளஷேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை ராணுவம் கைப்பற்றி உள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :12 மார்ச் 2023, 12:59 pm

ரஜெளரி: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டம், நெளஷேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை ராணுவம் கைப்பற்றி உள்ளது. 

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 

"உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், ஜங்கர், நெளஷேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே ராணுவத்தினா் சனிக்கிழமை (மார்ச் 11) அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, 2 அதிநவீன துப்பாக்கிகள், 2 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டு மற்றும் 2 கிலோ போதைப் பொருள்கள் சிக்கின" என்று  தெரிவித்தார். 

மேலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

முன்னதாக, மார்ச் 5 ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள முகமது ரபீக் வீட்டில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் 7 கிலோ போதைப்பொருள் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.