திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அசாமில் 10-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானது: 22 பேர் கைது!

அசாம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2023, 3:42 pm IST

அசாம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், திங்கள்கிழமை நடைபெறவிருந்த அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள், ஞாயிற்றுக்கிழமை இரவே கசிந்ததையடுத்து, அறிவியல் பாடத்திற்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அசாம் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்படக் குறைந்தது 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு தெரிவித்துள்ளார். 

மேலும், அறிவியல் பாடத்திற்கான மறுதேர்வு மார்ச் 30-ஆம் தேதி நடத்தப்படும் என்று அசாம் இடைநிலை வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.