நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அசாமில் 10-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானது: 22 பேர் கைது!

அசாம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2023, 10:12 am

DIN

அசாம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், திங்கள்கிழமை நடைபெறவிருந்த அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள், ஞாயிற்றுக்கிழமை இரவே கசிந்ததையடுத்து, அறிவியல் பாடத்திற்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அசாம் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்படக் குறைந்தது 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு தெரிவித்துள்ளார். 

மேலும், அறிவியல் பாடத்திற்கான மறுதேர்வு மார்ச் 30-ஆம் தேதி நடத்தப்படும் என்று அசாம் இடைநிலை வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.