அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
அருணாச்சல பிரதேசத்தின் மண்டலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: என் விடியோவைப் பார்த்துதான் ஆஸி. அணி ஜெயித்ததா?: அஸ்வின் கேள்வி
இன்று காலை 9:15 மணியளவில், போம்டிலா அருகே ராணுவ ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை உடனான தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.