வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பெங்களூருவில் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பு!

கர்நாடகத் தேர்தலையொட்டி பெங்களூரு விஜயநகரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரப் பேரணியில் ஈடுபட்டுள்ளார். 

News image
Updated On :8 மே 2023, 8:07 am

DIN

கர்நாடகத் தேர்தலையொட்டி பெங்களூரு விஜயநகரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரப் பேரணியில் ஈடுபட்டுள்ளார். 

224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடகப் பேரவைக்கு மே 10-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

இதற்கான தேர்தல் பிரசாரம் மே 8 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

கட்சியின் முக்கிய தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பெங்களூரு விஜயநகர் தொகுதியில் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார். 

மாபெரும் இந்த பேரணியில் காங்கிரஸ் ஆதரவாளர்கள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். வழிநெடுக பிரியங்கா காந்திக்கு மலர் தூவி வரவேற்பு அளித்து வருகின்றனர். 

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரு தினங்களாக பெங்களுருவில் 36 கிமீ தூரம் மாபெரும் சாலைப் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.