ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா, ஷோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் 15 இடங்களில் அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை நடத்தி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, அனந்த்நாக், ஷோபியான், பூஞ்ச், குப்வாரா ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 15 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. .
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்