ஜம்மு-காஷ்மீரில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை!

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா, ஷோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் 15 இடங்களில் அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை நடத்தி வருகிறது. 
ஜம்மு-காஷ்மீரில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை!

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா, ஷோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் 15 இடங்களில் அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை நடத்தி வருகிறது. 

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, அனந்த்நாக், ஷோபியான், பூஞ்ச், குப்வாரா ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 15 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. .

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com