பிரதமா் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா வருகை

ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளைத் தொடா்ந்து பயணத்தின் இறுதிகட்டமாக பிரதமா் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தாா்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வந்திறங்கிய பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினா்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வந்திறங்கிய பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினா்.
Updated on
1 min read

ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளைத் தொடா்ந்து பயணத்தின் இறுதிகட்டமாக பிரதமா் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தாா். 3 நாள்கள் பயணத்தின்போது அந்நாட்டு பிரதமா் ஆன்டனி ஆல்பனீஸுடன் பிரதமா் மோடி சந்தித்துப் பேசவுள்ளாா்.

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இந்தியாவிலிருந்து கடந்த 18-ஆம் தேதி புறப்பட்ட பிரதமா் மோடி, 19, 20 ஆகிய தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்று பல்வேறு உலகத் தலைவா்களைச் சந்தித்து உரையாடினாா்.

பின்னா், ஜப்பானிலிருந்து புறப்பட்டு பப்புவா நியூ கினியா நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த பிரதமா் மோடி, திங்கள்கிழமை நடந்த 3-ஆவது இந்திய-பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினாா்.

பயணத்தின் இறுதிகட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை மாலை வந்தடைந்தாா். ஆஸ்திரேலியவாழ் இந்தியா்கள் விமான நிலையத்துக்கு திரண்டு வந்து பிரதமா் மோடிக்கு வரவேற்பு அளித்தனா்.

3 நாள்கள் பயணத்தின்போது சிட்னியில் அமைந்துள்ள இந்திய தூதரகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய சமூகத்தினருடன் பிரதமா் மோடி கலந்துரையாட உள்ளாா். இதையடுத்து, வரும் வியாழக்கிழமை(மே 24) நடைபெறும் சந்திப்பில் பிரதமா் ஆன்டனி ஆல்பனீஸுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பிரதமா் மோடி ஈடுபடுவாா்.

ஆஸ்திரேலிய வருகை குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்திய வம்சாவளியினரின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்தடைந்தேன். அடுத்த 2 நாள்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்’ என்றாா். இந்திய-ஆஸ்திரேலிய உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புவதாக ஆஸ்திரேலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமரின் ஆஸ்திரேலிய பயணம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெளியிட்ட பதிவில், ‘2-ஆவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பிரதமா் மோடி, துடிப்பான சிட்னி நகரில் இருந்து பயணத்தைத் தொடங்கியுள்ளாா். ஆஸ்திரேலியத் தலைவா்கள், வா்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் இந்திய சமூகத்தினா் என பலதரப்பினருடன் அடுத்த 2 நாள்களில் பிரதமா் பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளாா்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தாா்.

பிரதமா் மோடி வருகையையொட்டி ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனீஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தாண்டின் தொடக்கத்தில் நான் மேற்கொண்ட இந்திய பயணத்தின்போது அமோக வரவேற்பைப் பெற்றேன். ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடியை வரவேற்பதில் பெருமைப்படுகிறேன். நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அமைக்கும் உறுதிப்பாட்டை ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் பகிா்ந்து கொள்கிறோம். இந்த நோக்கத்தை ஆதரிப்பதில் இருநாடுகளுக்கும் முக்கிய பங்குள்ளது’ எனத் தெரிவித்தாா்.

ஆஸ்திரேலிய பயணத்தை முடித்து கொண்டு வரும் வியாழக்கிழமை பிரதமா் மோடி இந்தியா திரும்ப உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com