காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதிய நாடாளுமன்ற கட்டடம்: மயில் வடிவில் மக்களவை; தாமரை வடிவில் மாநிலங்களவை!

புதிய நாடாளுமன்றத்தின் கட்டடத்தின் சிறப்பு அம்சங்களாக மயில் வடிவில் மக்களவையும்; தாமரை வடிவில் மாநிலங்களவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

News image

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

Updated On :28 மே 2023, 1:37 pm

DIN



புதுதில்லி: புதிய நாடாளுமன்றத்தின் கட்டடத்தின் சிறப்பு அம்சங்களாக மயில் வடிவில் மக்களவையும்; தாமரை வடிவில் மாநிலங்களவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

புதுதில்லியில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திருவாவடுதுறை ஆதினத்தால், பண்டித நேருக்கு அளிக்கப்பெற்ற செங்கோல் தற்போது பிரதமா் நரேந்திரமோடியால் நிறுவப்பட்டுள்ளது. 

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பு அம்சங்கள்: 

* புதிய நாடாளுமன்ற கட்டடம் நான்கு தளங்களைக் கொண்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1,250 கோடி. இதன் மொத்த பரப்பளவு 65 ஆயிரம் சதுர மீட்டர். 

* இந்த கட்டடத்தை கட்டுவதற்காக 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

* இந்த கட்டடத்தின் ஆயள் காலம் 150 ஆண்டுகள். இந்த கட்டடத்தில் நாட்டின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. 

* ராஜஸ்தானில் இருந்து சிவப்பு, வெள்ளை மார்பிள் கற்கள்,  உதய்பூரில் இருந்து கேஷரியா பச்சை நிற கற்களும்,  ஆஜ்மீரில் இருந்து சிவப்பு நிற கிரானைட் கற்களும், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து ஜல்லிக் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

* கட்டடத்தின் மேற்கூரைக்கான உருக்கு டாமன்-டையூவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

* குஜராத்தில் பித்தளை வேலைகளும், மும்பையில் மேசை, இருக்கைகள் செய்யும் பணி நடந்தது. 

* அசோகர் சின்னத்துக்கான பொருள்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

* கட்டடத்தின் கட்டுமான பணிக்கு தேவையான எம்சான்ட் மணல் ஹரியாணாவில் இருந்தும்,  சிமென்ட் கற்கள் ஹரியாணா, த்தரப்பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. 

* 2020 டிசம்பர் 10 ஆம் தேதி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

* புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. 

* மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.