வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 -ஆகப் பதிவு

மேற்கு வங்கம் மாநிலத்தில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது என்று  தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2023, 8:28 am

DIN

அலிபுர்துவார் (மேற்கு வங்கம்): மேற்கு வங்கம் மாநிலத்தில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது என்று  தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 3.6 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

முன்னதாக, ஆகஸ்ட் மாதம், மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இதே அளவு நிலநடுக்கம் பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.