நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உச்ச நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கைக்கு பாபா ராம்தேவ் பதில்!

உச்சநீதிமன்றம் எச்சரித்த நிலையில், அவரது நிறுவனத்திற்கு எதிராக தவறான பிரசாரம் செய்யப்படுவதாக ராம்தேவ் கூறியுள்ளார்.

News image
Updated On :22 நவம்பர் 2023, 5:50 pm IST

பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரித்ததை அடுத்து, அவரது நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் நடப்பதாக ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராம்தேவ், "உச்ச நீதிமன்றம்  பதஞ்சலியைக் கண்டித்ததாக நேற்று முதல் பல்வேறு ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. பொய் பிரசாரம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நாங்கள் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால் நாங்கள் எந்த பொய் பிரசாரமும் செய்யவில்லை.

மேலும் யோகா மற்றும் ஆயுர்வேதத்திற்கு எதிராக பிரசாரம் செய்ய ஒரு சில மருத்துவர்கள் குழு அமைத்து இருப்பதாக கூறிய ராம்தேவ், "நாங்கள் பொய் கூறுகிறோம் என்றால் எங்களுக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதியுங்கள், நாங்கள் மரண தண்டனைக்கு கூட தயாராக உள்ளோம். ஆனால் நாங்கள் பொய் கூறவில்லை என்பது நிரூபணமானால் பொய் பிரசாரம் செய்பவர்களைத் தண்டியுங்கள்" என்று கூறினார். 

பதஞ்சலி வெளியிட்டுள்ள ஆயுர்வேத பொருட்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சான்றுகளும் இருப்பதாகவும் ராம்தேவ் உறுதியளித்தார்.

முன்னதாக, நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக தவறான தகவல்கள் மற்றும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டித்தது.

அத்தகைய விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதஞ்சலி நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.