கடந்த 16 நாள்களாக சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புது முயற்சியாக இன்று (நவ.27) கையால் தோண்டும் கருவியின் மூலம் இந்திய ராணுவப் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், மீட்புப் பணி தொடர்ந்து பின்னடவை சந்தித்தே வருகிறது.
இதனிடையே, 60 மீட்டா் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன.
குழாய் செலுத்தும் பாதையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள துளையிடும் ‘ஆகர்’ இயந்திரத்தின் பிளேடுகளை அகற்றுவதற்கான பணியை இந்திய ராணுவத்தின் ‘பொறியாளா்கள் குழு’ வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா். இந்த நிலையில், அந்த பிளேடு முழுமையாக அகற்றப்பட்டு, துளையிடும் பணி தொடங்கியிருக்கிறது.
மீதமுள்ள ஒன்பது மீட்டர் (29 அடி) தொலைவுக்கு குழாயைச் செலுத்துவதற்கு, பாறைகள் மற்றும் இடிபாடுகளை அகற்ற மனித முயற்சியில் செங்குத்தாக துளையிடும் (rat-hole mining) நுட்பத்தை பயன்படுத்த வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கையால் துளையிடும் கருவியின் மூலம் பணியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளூர் அரசு ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவப் பொறியாளர்கள், மற்ற மீட்பு அதிகாரிகளுடன் சேர்ந்து, கையால் தோண்டும் புது நுட்பத்தை பயன்படுத்த தயாராகி வருகின்றனர். அப்பகுதியில் கடுமையான குளிர் நிலவுவதால், இப்பணி ராணுவ பொறியாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.
மீட்புக் குழுக்களுக்கு ஆலோசனை வழங்கும் சுரங்கப்பாதை நிபுணர் கிறிஸ் கூப்பர், குழாயைச் செலுத்துவதற்கு மீட்புப் படையினரால் கையால் தோண்டி எடுக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டத்தின் பணி கால் பங்கு நிறைவடைந்துள்ளது.
துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. முதல் நாளில், 19 மீட்டா் ஆழத்துக்கு துளையிடப்பட்டது. எந்த இடையூறும் இல்லாத சூழலில், 100 மணிநேரத்தில் (4 நாள்கள்) தொழிலாளா்களை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடாதது கவலையளித்தது: இஷான் கிஷன்
இந்தப் பாதையில் குறுக்கே உள்ள பாறைகளின் தன்மையைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்னம் தொகுதியை தக்கவைத்தாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்

கரூா் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் திமுக வெற்றி! தவெக, அதிமுக, தலா ஒரு இடங்களில் வெற்றி!

ஜெயங்கொண்டத்தில் பாமக வேட்பாளா் வெற்றி

7 தொகுதி இடைத்தோ்தல்: ஆளுங்கட்சிகள் வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


