சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கையால் தோண்டுகின்றனர்! சுரங்கப் பாதையில் சிக்கியவர்களை மீட்க புது முயற்சி!!

இன்று (நவ.27) கையால் தோண்டும் முயற்சியில் இந்திய ராணுவப் பொறியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், மீட்பு நடவடிக்கை தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:39 pm IST

கடந்த 16 நாள்களாக சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புது முயற்சியாக இன்று (நவ.27) கையால் தோண்டும் கருவியின் மூலம்  இந்திய ராணுவப் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், மீட்புப்  பணி தொடர்ந்து பின்னடவை சந்தித்தே வருகிறது.

இதனிடையே, 60 மீட்டா் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன.

குழாய் செலுத்தும் பாதையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள துளையிடும் ‘ஆகர்’ இயந்திரத்தின் பிளேடுகளை அகற்றுவதற்கான பணியை இந்திய ராணுவத்தின் ‘பொறியாளா்கள் குழு’ வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா். இந்த நிலையில், அந்த பிளேடு முழுமையாக அகற்றப்பட்டு, துளையிடும் பணி தொடங்கியிருக்கிறது.

மீதமுள்ள ஒன்பது மீட்டர் (29 அடி) தொலைவுக்கு குழாயைச் செலுத்துவதற்கு, பாறைகள் மற்றும் இடிபாடுகளை அகற்ற மனித முயற்சியில் செங்குத்தாக துளையிடும் (rat-hole mining) நுட்பத்தை பயன்படுத்த வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கையால் துளையிடும் கருவியின் மூலம் பணியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளூர் அரசு ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவப் பொறியாளர்கள், மற்ற மீட்பு அதிகாரிகளுடன் சேர்ந்து, கையால் தோண்டும் புது நுட்பத்தை பயன்படுத்த தயாராகி வருகின்றனர். அப்பகுதியில் கடுமையான குளிர் நிலவுவதால், இப்பணி ராணுவ பொறியாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. 

மீட்புக் குழுக்களுக்கு ஆலோசனை வழங்கும் சுரங்கப்பாதை நிபுணர் கிறிஸ் கூப்பர், குழாயைச் செலுத்துவதற்கு மீட்புப் படையினரால் கையால் தோண்டி எடுக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டத்தின் பணி கால் பங்கு  நிறைவடைந்துள்ளது.

துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. முதல் நாளில், 19 மீட்டா் ஆழத்துக்கு துளையிடப்பட்டது. எந்த இடையூறும் இல்லாத சூழலில், 100 மணிநேரத்தில் (4 நாள்கள்) தொழிலாளா்களை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பாதையில் குறுக்கே உள்ள பாறைகளின் தன்மையைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.