வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜார்க்கண்ட் மத்தியச் சிறையில் மாவோயிஸ்ட் பலி!

ஜார்க்கண்டின் மேதினிநகரில் உள்ள பாலமு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

News image
Updated On :28 நவம்பர் 2023, 6:31 am

DIN

ஜார்க்கண்டின் மேதினிநகரில் உள்ள பாலமு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பலமு மாவட்டத்தின் மானாடு காவல் நிலையப் பொறுப்பாளர் கமலேஷ் குமார் கூறுகையில், 

திரிதியா சம்மேளன பிரஸ்துதி கமிட்டியின் (டிஎஸ்பிசி), சிபிஐயின் (மாவோயிஸ்ட்) பிரிந்த குழுவின் தளபதி கிஸ்லே சிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலாமு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், கிஸ்லே சிங் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறை நிர்வாகம் அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.