தில்லி : நாடு முழுவதும் நடப்பாண்டுக்கான சர்க்கரை தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அனைத்திந்திய சர்க்கரை வணிக சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 340 லட்சம் டன்னுக்கும் அதிக கொள்ளளவிலான கரும்பு பிழிந்து சாறு எடுக்கும் திறனுடன் 700க்கும் அதிகமான சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. அங்கு வழக்கமாக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், கரும்பை பிழிந்துச் சாறு எடுத்துச் சர்க்கரை தயாரிக்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்குப் பின், நாடு முழுவதுமுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் கரும்பு பிழிந்து சாறு எடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக என்று அனைத்திந்திய சர்க்கரை வணிக சங்க தலைவர் பிரபூல் விதாலானி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் 2023-24 பருவ காலத்திற்கான கரும்பு விளைச்சல் 434.79 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருட விளைச்சலான 422.25 மில்லியன் டன்களை விட அதிகமாகும் என்று மத்திய வேளான் அமைச்சகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், அக்.1 நிலவரப்படி, 5.7 மில்லியன் டன்கள் சர்க்கரை இருப்பு உள்ளதாகவும், 2022-23 ஆண்டு காலகட்டத்தில் பல மாநிலங்களில் நிலவிய மோசமான வானிலையால் உள்நாட்டு கரும்பு உற்பத்தி சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சர்க்கரை நுகர்வு, 29 மில்லியன் டன்களாக உள்ளதாகவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐடி பங்குகள் தொடர் விற்பனையால் சென்செக்ஸ் 607 புள்ளிகளுடனும் நிஃப்டி 155 புள்ளிகள் சரிவு!

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



