சித்ரதுர்கா: கர்நாடகத்தில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் சித்தராமையா இவ்வாறு தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது: நாங்கள் மதுக் கடைகளை திறக்கவில்லை. நாங்கள் திறக்கிறோம் என்று யார் சொன்னது? இது குறித்து நாங்கள் யோசிப்போம் என்று அமைச்சர் கூறியுள்ள நிலையில் நாங்கள் திறக்க மாட்டோம். அதே வேளையில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கிராம பஞ்சாயத்துகளில் மதுபானக் கடைகளை அமைக்க பரிந்துரைக்கும் திட்டத்தை கர்நாடக கலால் துறை, அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
வறட்சி நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள 10 பேர் கொண்ட மத்திய குழுவிடம் கள நிலவரங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அதே வேளையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 236 தாலுகாக்களில் உள்ள 195 தாலுகாக்கள் வறட்சி பாதித்த தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 30,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதையும் படிக்க: இந்தியாவில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது!
மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களில் குறைவான நீர் குறித்து மத்திய குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் விதிமுறைகளின்படி ரூ.4,860 கோடி கோரப்பட்டது. உண்மையான இழப்பு சுமார் ரூ.30,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
மதுக்கடைகள் தொடர்பான திட்டம் மக்கள் விரோதமானது என்று கூறி பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று அரசை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



