பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மேற்கு வங்கம்: சர்வதேச எல்லை வழியாக தங்கம் கடத்திய 4 வங்கதேசத்தினர் கைது

மேற்கு வங்க எல்லையில் தங்கத்தை கடத்தியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

News image
கோப்புப்படம்
Updated On :14 அக்டோபர் 2023, 1:29 pm

DIN

மேற்கு வங்க எல்லையில் தங்கத்தை கடத்தியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேற்கு வங்கத்தின் பெட்ராபோலில் உள்ள சர்வதேச எல்லையான இந்தியா-வங்கதேச எல்லை வழியாக ரூ.1. 86 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தியதாக ஒரு பெண் உட்பட 4 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர். 

பெலால் ஹொசைன் (40), முகமது கபீர் (48), அசம் கான் (46), ஜூபிதா கானும் (33) ஆகிய நான்கு பேரும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டப்பூர்வமாக நுழையும்போது, ​​அவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். 

உடனே அவர்களிடமிருந்து 3.19 கிலோ எடையுள்ள 23 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 4 தங்க வளையல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து கைதான 4 பேரும் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.