
பெங்களூருவில் உள்ள தொழிலதிபரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.
கசவனஹள்ளி பகுதியில் உள்ள தொழிலதிபரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று காலை சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. தொழிலதிபர் இரண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர் என்றும், அவர் அந்த நிறுவனங்களில் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநராகப் பதவி வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் ஒரே நேரத்தில் எட்டு வாகனங்களில் வந்து சோதனையை மேற்கொண்டனர்.
கடந்த வாரம் முதல் இதுவரை ரூ.80 கோடிக்கும் அதிகமான பணம் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
முந்தைய பாஜக அரசுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் கட்டணத்தை உயர்த்திய ஒப்பந்ததாரருக்குச் சொந்தமான குடியிருப்பில் ரூ.40 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கட்டடத் தொழிலாளியின் குடியிருப்பு ஒன்றில் மேலும் ரூ.40 கோடி ரொக்கம் கைப்பற்றினர்.
ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நிதிக்காகப் பணம் வசூலிக்கப்படுவதாக பாஜக மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நேரடியாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.