விளம்பரங்கள் எந்தளவுக்கு ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், விவாதத்திற்கும் காரணமாக அமைகின்றன.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சியின் நாளிதழ் விளம்பரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
‘விழிப்புணர்வு அணியில் இணையுங்கள். எதிர்த்து சண்டையிடுங்கள்’ என்கிற வாசகம் தாங்கிய விளம்பரத்தில் நடித்துள்ள பெண்ணின், நெற்றியில் நிறுத்தக் குறியிடப்பட்டிருந்ததுதான் சர்ச்சைக்குக் காரணம். நெற்றிப்பொட்டு வைக்கும் இடத்தில் சிவப்பு நிறத்தில் நிறுத்தக்குறியிடப்பட்டுள்ளது.
வங்கியின் பயனர்கள் எதிர்கொள்ளும் பண மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
``பண மோசடி செய்பவர்கள் புதிய எதிரிகள், அவர்கள் இன்னும் பெரிதாகவும் சூழ்ச்சியோடும் மாறி வருகிறார்கள். மோசடி குறித்த தகவல்களை உங்கள் கைக்கு அருகில் கொண்டு வரவே `மோசடிக்கு உள்ளாகாதீர்கள்’ முன்னெடுப்பு” என்கிற வாசகங்கள் இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க: ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் பள்ளிக் கட்டணம் இவ்வளவா?
ஆனால், விளம்பர நடிகையின் நெற்றிப்பொட்டு இந்து மதத்தின் கலாச்சாரத்தை அவமதிப்பதாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைத்தளப் பயனர்களில் சிலர், இந்த வங்கியைப் புறக்கணிக்கவும் கோரிக்கை வைக்கின்றனர்
இந்த விளம்பரத்தில் அனுராதா மேனன் மாடலாக நடித்துள்ளார். தனியார் வங்கி சார்பில் சர்ச்சை குறித்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
மேலும், சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியின் போது தனியார் செயலி ஒன்று `பாகிஸ்தான் ரசிகர்களுக்குத் திறந்த மடல்’ என்கிற பெயரில் வெளியிட்ட விளம்பரமும் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
@HDFC_Bank What is this?How can you mock Hindu women like this?Do Hindu women wear bindi like this?What the need of a women in vigil army.@KreatelyMedia pic.twitter.com/pJmJCgrcZx
â shambu das (@DasShambu) October 16, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு

தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள்! எந்தெந்த கல்லூரிகளில்?

வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்!







