சந்திரயான் -3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் இருந்து 600 கி.மீ. தொலைவில் சந்திரயான் -3 நிலை கொண்டுள்ள நிலையில் நாசா புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. சந்திரயான் லேண்டர் பாதிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய ஆர்பிட்டர்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது.
நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா், ஆக. 23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. மேலும், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரும் நிலவின் மீது தரையிறங்கி, அதில் பொருத்தப்பட்டுள்ள ஆய்வுக் கருவிகளின் உதவியுடன் ஆராய்ச்சி செய்து வருகிறது.
இதையும் படிக்க: மோடியின் பாதுகாப்புப் படை இயக்குநர் உயிரிழப்பு!
நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டரின் முப்பரிமாண படத்தை திங்கள்கிழமை(செப்.5) இஸ்ரோ வெளியிட்டது. இந்தப் படத்தை நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ரோவர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.