பாரமுல்லாவில் மூன்றாவது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லை வழியாக ஊடுருவும் முயற்சியைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்ததில் மூன்றாவது பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 
பாரமுல்லாவில் மூன்றாவது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லை வழியாக ஊடுருவும் முயற்சியைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்ததில் மூன்றாவது பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவப் படைத் தலைவா் கா்னல் மன்ப்ரீத் சிங், ராணுவ மேஜா் ஆசிஷ், காவல் துறை துணை கண்காணிப்பாளா் ஹுமாயூன் பட் ஆகிய 3 அதிகாரிகள் புதன்கிழமை உயிரிழந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. தேடுதலின் முடிவில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மூன்றாவது பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com