எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணம்!

ஆதித்யா எல்1 விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணம்!

ஆதித்யா எல்1 விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

உந்து விசை இயக்கப்பட்டு புவி வட்டப்பாதை தொலைவு படிப்படியாக ஐந்து முறை அதிகரிக்கப்ப்பட்டது. 

இதனிடையே, ஆதித்யா விண்கலம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் புவிவட்டப் பாதையில் இருந்து விலக்கப்பட்டு சூரியனை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

இது சுமார் 110 நாள்கள் பயணத்துக்குப் பின்னா் புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்கலம் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com