சிக்கிமில் கடத்தப்பட்ட 15 வயது சிறுவன் மீட்பு: 3 பேர் கைது!

சிக்கிமில் கடத்தப்பட்ட 15 வயது சிறுவன் பீகார் பகுதியில் மாதேபுரா மாவட்டத்தில் மீட்கப்பட்டார்.
சிக்கிமில் கடத்தப்பட்ட 15 வயது சிறுவன் மீட்பு: 3 பேர் கைது!
Updated on
1 min read

மாதேபுரா: சிக்கிமில் கடத்தப்பட்ட 15 வயது சிறுவன் பீகார் மாதேபுரா மாவட்டத்தில் மீட்கப்பட்டார்.

கடந்து ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கேங்டாக்கில் உள்ள பள்ளிக்கு வெளியே சிறுவன் கடத்தப்பட்டான் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

அதே வேளையில் கேங்டாக்கில் கடத்தப்பட்ட சிறுவன் மாதேபுராவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக சிக்கிம் காவல்துறையிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது அடுத்து அவனை தேட தனிப்படை அமைக்கப்பட்டது.

சிறுவனை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் சுசா காவல் நிலையப் பகுதியில் கைது செய்யப்பட்டு சிறுவனை பத்திரமாக மீட்டனர் காவல்துறையினர். சிறுவனை மீட்ட போது சிறுவனை அவர்கள் பிணைக்கைதியாக வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

மீட்பு குறித்து சிக்கிம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதே வேளையில் சிறுவனை ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் முடிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com