சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், 'பகத் சிங்கை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறோம். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவர் செய்த தியாகமும், தளராத அர்ப்பணிப்பும் அடுத்தடுத்த தலைமுறைகளை ஊக்கப்படுத்துகின்றன. தைரியத்தின் கலங்கரை விளக்கமாக, அவர் என்றென்றும் இந்தியாவின் நீதி, சுதந்திரத்திற்கான போராட்டத்தின் அடையாளமாக இருப்பார்' என்று பதிவிட்டுள்ளார்.
பகத் சிங்கின் பிறந்தநாளையொட்டி அவர் நாட்டுக்கு செய்த நற்பணிகளை நினைவு கூர்ந்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.