2022-23 நிதியாண்டில் மட்டும் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் வருவாயும் மட்டும் 61% அதிகரித்துள்ளது
இது தொடர்பாக இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23 நிதியாண்டில் இந்திய ரயில்வே ₹2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.49,000 கோடி அதிகமாகும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வூதியச் செலவினங்களை இந்திய ரயில்வேயால் சமாளிக்க முடிகிறது. வருவாய் மற்றும் செலவின மேலாண்மையை சரி செய்ததன் மூலம் ரயில்வேயின் மூலதன முதலீடு ரூ.3,200 கோடியாக உயர்ந்துள்ளது.