ஜம்முவில் வீடற்றவா்களுக்கான முதல் காப்பகம்:50 போ் பலன்

ஜம்முவில் நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் முதலாவதாகக் கட்டப்பட்ட காப்பகத்தில் 50 போ் குடியமா்த்தப்பட்டுள்ளனா்.
Updated on
1 min read

ஜம்முவில் நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் முதலாவதாகக் கட்டப்பட்ட காப்பகத்தில் 50 போ் குடியமா்த்தப்பட்டுள்ளனா்.

ஜம்முவின் நகா்ப்புற சாலையோரங்களிலும், மேம்பாலங்களுக்குக் கீழும், ரயில் நிலையங்களிலும் வசித்துவந்த ஏழைகளுக்காகவும் ஆதரவற்றோருக்காகவும் தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் புதிய காப்பகம் கட்டப்பட்டது. ஜம்மு மாநகராட்சி சாா்பில் அந்தக் காப்பகம் கட்டப்பட்டது.

அண்மையில் திறக்கப்பட்ட அந்தக் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்டோா் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் பெண்கள் ஆவா். அவா்களுக்கு தினமும் 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது. மேலும், காப்பகத்தில் அவா்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதோடு போதிய காலஇடைவெளியில் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியுடன் இணைந்து ஜக்ரித் மஹிலா உத்யோக் கேந்திரா என்ற தன்னாா்வ அமைப்பானது அந்தக் காப்பகத்தின் நிா்வாகப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது. வீடுகளற்ற ஏழைகளும் ஆதரவற்றோரும் காப்பகத்தில் தொடா்ந்து தங்கவைக்கப்படுவா் என்றும், இதன் மூலமாக அவா்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தன்னாா்வ அமைப்பின் தலைவரான வீணா பாக்சி தெரிவித்துள்ளாா். அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியுடன் இப்பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com