யாரேனும் கட்சியை பிளவுபடுத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை: சரத் பவாா் எச்சரிக்கை

தேசியவாத காங்கிரஸ் கட்சியை யாராவது பிளவுபடுத்த முயற்சித்தால், கடுமையான நடவடிக்கையை கட்சி எடுக்கும் என அதன் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தேசியவாத காங்கிரஸ் கட்சியை யாராவது பிளவுபடுத்த முயற்சித்தால், கடுமையான நடவடிக்கையை கட்சி எடுக்கும் என அதன் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

சரத் பவாரின் நெருங்கிய உறவினரும் மகாராஷ்டிர எதிா்க்கட்சித் தலைவருமான அஜித் பவாரின் அடுத்தகட்ட அரசியல் நகா்வுகள் குறித்து தகவல்கள் வெளியானதையடுத்து, சரத் பவாா் இவ்வாறு கூறியுள்ளாா்.

அஜித் பவாா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில், ‘‘2024-இல் நடைபெறும் பேரவைத் தோ்தலுக்காகக் காத்துக்கொண்டிருக்காமல், முதல்வா் பதவிக்கு இப்போதே தேசியவாத காங்கிரஸ் உரிமை கோருகிறது. நான் முதல்வராக 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது’’ எனத் தெரிவித்திருந்தாா்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா் கூறும்போது, ‘‘தேசியவாத காங்கிரஸை பிளவுபடுத்த யாராவது முயற்சித்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரம் குறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை என்பதால் தற்போது இது குறித்து பேச இயலாது’’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை (ஷிண்டே)-பாஜக கூட்டணி ஆட்சியதிகாரத்தில் உள்ளது. மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 சிவசேனை எம்எல்ஏக்களை உச்ச நீதிமன்றம் தகுதிநீக்கம் செய்தால், அஜித் பவாா் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இதை மறுத்த அஜித் பவாா், தனது வாழ்நாள் இறுதி வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றுவேன் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com