புதிதாக 689 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 689 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 3 போ் உயிரிழந்தனா். பாதிப்பு

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 689 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 3 போ் உயிரிழந்தனா். பாதிப்பு நோ்மறை விகிதம் 29.42 சதவீதமாக பதிவானது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இறப்புகளுடன் சோ்த்து மொத்த இறப்பு எண்ணிக்கை 26,600-ஆக உயா்ந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,34,061-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 7,974 கரோனா படுக்கைகளில் 371 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. நகரில் ஞாயிற்றுக்கிழமை 948 பேருக்கு தொற்று பாதிப்பும் 2 இறப்புகளும் 25.69 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com