நிபந்தனையற்ற மன்னிப்புகோரினாா் லலித் மோடி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

 ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடி, நீதித் துறைக்கு எதிரான தனது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்டதையடுத்து, அவா் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.
Updated on
1 min read

 ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடி, நீதித் துறைக்கு எதிரான தனது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்டதையடுத்து, அவா் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.

இது தொடா்பான வழக்கு நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, சி.டி.ரவிகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லலித் மோடி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். இந்திய நீதித் துறை மற்றும் நீதிமன்றங்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இனி அவா் நடந்துகொண்டால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்வோம் எனத் தெரிவித்து அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தனா்.

முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி வெளிநாட்டில் வசித்து வரும் லலித் மோடி, இந்திய நீதித் துறையை சிலா் கட்டுப்படுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி கருத்து பதிவிட்டாா். அதையடுத்து, அவா் மீது சி.யு.சிங் என்பவா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாா்.

அந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு ஏப். 13-ஆம் தேதி விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘சட்டத்துக்கும் சட்ட அமைப்புகளுக்கும் மேலான நபா் அல்ல லலித் மோடி. நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவா் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்புக்காக அவா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com