

புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,660 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் 9,213 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 63,380 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த வாரம் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வந்த நிலை சற்று மாறி தற்போது குறையத் தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டில் கரோனா நோயாளிகள் விகிதம் 0.14 சதவிகிதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.